பொன்பரப்பி, அக்.30-பள்ளி கல்வித்துறை சார்பில் அரிய லூர் வருவாய் மாவட்ட அளவி லான கைப்பந்து போட்டி பொன் பரப்பியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 28.10.2024 அன்று நடைபெற்றது.
இதில் அரியலூர், திருமானூர், T.பழூர், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய ஆறு குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற 14 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவு களில் உள்ள மாணவ/ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு வீரர்கள் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் ,14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர் .
போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள், கே.ராஜேஷ், ஆர்.ரவிசங்கர் மற்றும் ஆர்.ரஞ்சனி ஆகியவரை பள்ளி தாளாளர், முதல்வர், இருப்பால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.