தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா – புத்தகங்கள் வழங்கல்

1 Min Read

கடந்த 22.7.2024 அன்று கோவிந்தராசன் குடும்பத்தினரின் மகிழ்ச்சி இல்லத்தில் அமைந்துள்ள பொறியாளர் ப.கோவிந்தராசன் அவர்களின் சிலையை தமிழர் தலைவர் அவர்கள் திறந்து வைத்ததன் நினைவாக அன்னாரது துணைவியார் சிவ.கனிமொழி, மகள் தென்றல் மற்றும் மகன் அறிவன் ஆகியோர் தங்கள் குடும்பத்தின் சார்பாக இரண்டாண்டு ‘விடுதலை’ சந்தா தொகை ரூ.4000மும், 19 புத்தகங்களையும் சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, துணைத் தலைவர் க.தமிழினியன், வழக்குரைஞர் கொரட்டூர் பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் வழங்கினர். நூல்களை நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி…

– நூலகர்
பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *