தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது : தொல்.திருமாவளவன்

Viduthalai
1 Min Read

சென்னை, அக்.30 திமுக கூட்டணி யில் சலசலப்பை ஏற்படுத்துவதற்காக, தவெக தலைவா் விஜய் பேசியிருந்தாலும், எங்கள் கூட்டணி வலுவாகவே உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினார்.
சென்னையில் அவா் 28.10.2024 அன்று அளித்த பேட்டி: விஜய் ஒரு முன் மொழிதலை தமிழ்ச் சமூகத்துக்கு அளித்துள்ளார். அவை அனைத்துமே ஏற்கெனவே பல்வேறு கட்சிகளால் முன்மொழியப்பட்டவைதான். கூட் டணி ஆட்சி என்கிற ஒன்றை மட்டும் புதிதாகக் கூறியுள்ளார்.
உண்மையிலேயே ஆட்சிக்கு வர முடியும் என்கிற நிலையில், இந்த நிலைப்பாட்டை எடுப்பாரா என்கிற கேள்வி உள்ளது.

இப்போதைய நிலையில், அரசியல் யுக்தியாக அதைக் கையாண்டிருக்கிறார் என்ற பார்க்க வேண்டும். திமுகவையும், அதன் கூட்டணியையும் குறி வைத்துதான் விஜயின் ஒட்டுமொத்த பேச்சின் சாராம்சம் இருந்தது. திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்துவதற்காக விஜய் அப்படிச் செய்திருப்பதாக ஆரூடம் பேசுகின்றனா். என்னைப் பொருத்தவரை திமுக கூட்டணி வலுவாக உள்ளது. திமுகவுடன் கூட்டணி தொடரும்.
பிளவுவாத எதிர்ப்பை விஜய் கூறியிருந்தாலும், பாசிச எதிர்ப்பை நை யாண்டி செய்துள்ளார். பாசிசம் என்பது பாஜகவை அடையாளப்படுத்தும் சொல்லாகத்தான் தமிழ்நாட்டில் உள்ளது. பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்தது அவா் பேசிய கருத்துகளுக்கு முரண்பாடாக உள்ளது என்றார் அவா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *