வங்கி பெயரில் மோசடி விழிப்புடன் இருக்க காவல்துறை எச்சரிக்கை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜூலை 29- தமிழ்நாடு ‘சைபர் கிரைம்’ பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் சஞ்சய் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு காவல்துறையின் ‘சைபர் கிரைம்’ பிரிவு அவ்வப்போது பொதுமக்களுக்கு புதிய ‘ஆன் லைன்’ மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. 

தற் போது இணைய வழி மோசடி நபர்கள் ‘இந்தியா போஸ்ட் பேமண்ட்’ வங்கியின் வாடிக்கையாளர்களை குறி வைத்து பண மோசடி செய்வதற்காக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பு கின்றனர்.

அந்த குறுஞ்செய்தியில், உங்கள் ‘இந்தியா போஸ்ட் பேமண்ட்’ வங்கியின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. எனவே குறுஞ்செய்தியில் உள்ள ‘லிங்க்’கை கிளிக் செய்து, உங்கள் பான் கார்டு எண்ணை பதிவு செய்யுங்கள் என்று கூறு கின்றனர்.

இதனை உண்மை என்று நம்பி அந்த லிங்க்கை பொதுமக்கள் திறந்தவுடன், ‘இந்தியா போஸ்ட் பேமண்ட்’ வங்கியின் இணைய தளம் போலவே போலியான இணையதளம் தோன்றும். அதில் வாடிக்கையாளர் தங்களது வங்கி சேமிப்பு கணக்கு எண், வாடிக்கை யாளர் அடையாள எண், அலை பேசி எண், பிறந்த தேதி, பான் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய கேட்கும்.

அந்த தகவல்களை அந்த இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் ஓ.டி.பி.யை பதிவு செய்ய கேட்கும். அதில் ஓ.டி.பி. எண்ணை பதிவு செய்தவுடன் வாடிக்கையா ளரின் ’இந்தியா போஸ்ட் பேமண்ட்’ வங்கி கணக்கில் இருந்து மோசடி நபரின் வங்கி கணக்கிற்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள் ளப்பட்டு வாடிக்கையாளர் ஏமாற் றப்படுகின்றனர்.

எனவே அறிமுகம் இல்லாத நபர்களிடம் தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல், பிஷிங் இணையதளம், வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடகங்களை கையாளுதல்கள் மூலமாக வருகிற ‘லிங்க்’குகளை தொடர்பு கொள்ள வேண்டாம். ஓ.டி.பி.யையும் பகிர வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *