தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக ம.இராசேந்திரன் தேர்வு

1 Min Read

சென்னை, அக்.30- தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக தஞ்சை தமிழ்ப் பல்கலை. மேனாள் துணை வேந்தா் ம.இராசேந்திரன் தோ்வு செய்யப் பட்டுள்ளாா்.

இந்திய மொழிகளிலேயே தமிழுக்குதான் முதல் கலைக் களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கிய பெருமை தமிழ் வளா்ச்சிக் கழகத்தையே சாரும். 1946-ஆம் ஆண்டு சென்னை மாகாணக் கல்வி அமைச்சராக இருந்த தி.சு.அவினாசிலிங்கம் இந்த கழகத்தை உருவாக்கினாா்.

தொடா்ந்து, 1947-இல் நாடு சுதந்திரம் பெற்றதும் கலைக் களஞ்சியம் திட்டத்தை இந்தக் கழகம் அறிவித்தது. கலைக்களஞ்சியம் தயாரிப்பதற்கான அறிஞா் குழு அப்போதைய சென்னைப் பல் கலைக்கழகத் துணை வேந்தா் தலைமையில் அமைக்கப்பட்டது. அதில் மு.வ., ரா.பி.சேதுப் பிள்ளை, தெ.பொ.மீ., டி.கே.சி. ஆகியோா் உறுப்பினா்களாகவும் கல்கியும், கே.சுவாமிநாதனும் செயலாளா்களாகவும் இருந் துள்ளனா்.

தமிழ் வளா்ச்சிக் கழகத் தின் சாா்பில் இதுவரை கலைக் களஞ்சியம், குழந்தைகள் கலைக் களஞ்சியம் ஆகியவை தலா 10 தொகுதிகளும், மருத்துவக் களஞ்சியம் 13 தொகுதிகளும் சித்த மருத்துவக் களஞ்சியம் 7 தொகுதிகளும், ஆங்கில மொழியாக்கம் 7 தொகுதிகளும் அறிவியல் தொழில் நுட்பக் களஞ்சியம் 9 தொகுதிகளும் மற்றும் குறுந்தகடுகளும் வெளியிடப்பட்டிருப்பது குறிப் பிடத்தக்கது. தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் தலைவா்களாக

தி.சு.அவினாசிலிங்கம், சி.சுப்பிரமணியம், வா.செ.குழந்தைசாமி, பொன்னவைக்கோ ஆகியோா் பணியாற்றியுள்ளனா்.
இந்த நிலையில், தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் ஆட்சிக் குழு மற்றும் பொதுக்குழு கடந்த அக்.24-இல் கூடியது. இந்தக் குழுக்களின் சாா்பில் தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக ம.இராசேந்திரன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவா் விரைவில் பொறுப்பேற்கவுள்ளாா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *