இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் மாநில அளவில் (சென்னை நீங்கலாக) சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கவுள்ளது. இந்த பரிசைப் பெற, சம்பந்தப்பட்ட வட்டார, மாவட்ட தோட்ட கலை அலுவலகங்களில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது