தீபாவளி நட்டக் கணக்கு

1 Min Read

தீபாவளியில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்கள் பற்றி தந்தை பெரியார் எடுத்துக்காட்டும் கணக்கு விவரம்:
1. துணி தேவை இருக்கின்றவர்களும். தேவை இல்லாதவர்களும் தீபாவளியை உத்தேசித்துப் புதுத்துணிகளை வாங்குவது.
2. மக்கள். மருமக்களை மரியாதை செய்வதற்கென்று யோக்கியதைக்கு மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றல்லாதனவுமான துணிகள் வாங்குவது.
3. அர்த்தமற்றனவும் பயனற்றனவுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகளை வாங்கிக் கொளுத்துவது.
4. பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டம் கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதைச் சூதாட்டத்திலும், மதுக்குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்துகொள்வது.
5. இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பயணம் செய்து பணம் செலவழிப்பது.
6. அன்று ஒவ்வொருவர் வீட்டிலும் உணவுகளை (பலகாரங்கள் – காய்கறி, சாப்பாட்டு வகைகளை) தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும் பாகத்தைக் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும்.
7. இந்தச் செலவுகளுக்காக கடன்படுவது.

– தந்தை பெரியார்
(‘உண்மை’ – 14.10.1971)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *