கந்தர்வக்கோட்டை,ஜூலை 30 – புதுக்கோட்டை கழக மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இன்று (30.7.2023) காலை தமிழ்மீனா திருமண அரங்கத்தில் 55 மாணவர்களுடன் தொடங்கியது. திராவிட மாணவர் கழகமாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில மருத்துவரணி தலைவர் டாக்டர் இரா.கவுதமன் – “பேய் ஆடுதல், சாமி ஆடுதல் – அறிவியல் விளக்கம்” என்ற தலைப்பில் மூடநம்பிக்கைகளை ஒழித்து அறிவியல் விளக்க மளித்து முதல் வகுப்பெடுத்தார். மாநில கழக ஒருங் கிணைப்பாளர், பெரியார் பயிற்சிப் பட்டறை பொறுப் பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.