பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஆராய்ச்சித் திறன் மேம்பாடு மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு சார்ந்த வினாடி-வினா

1 Min Read

திருச்சி, அக்.28- பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கம் அதிகரிக்கவும், இந்திய அஞ்சல் துறை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத் தவும் ஒன்றிய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற உதவித்தொகை திட்டத்தின் அடிப்படை யில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அவர் களின் ஆராய்ச்சித் திறன் மேம்பாடு மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு சார்ந்த வினாடி-வினா எழுத்துத் தேர்வு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான இந்த வினாடி-வினா எழுத்துத் தேர்வு திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 26.10.2024 (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடை பெற்றது.

இதில் பள்ளியில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 70க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இத்தேர்வுக்கான சிறப்புக் கண்காணிப்பாள ராக, திருச்சி மாவட்ட தலைமை அஞ்சல் துறையின் துணைத் தலைவர் கே.சீனிவாசன் மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் வந்திருந்து தேர்வு எழுதும் மாணவர் களை ஆய்வு செய்தனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை இத்தேர்வுக் கான பொறுப்பாளரும் பள்ளியின் முதுகலை ஆசிரியருமான, டி.இரு தய இசபெல்லா உள் ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *