திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக திருக்குறள் திருவிழா

Viduthalai
1 Min Read

25.10.2024 வெள்ளிக்கிழமை பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாகவும் மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாகவும் திருக்குறள் திருவிழா காலை 10 மணி முதல் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மொழியின் செயலில் கற்றல் கற்பித்தலில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியானது மழலையர் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடைபெற்றது. திருக்குறளின் ஊக்கமுடைமை அதிகாரத்தில் பேச்சுப் போட்டியானது 6 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்றது. வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்றது. போட்டிகளில் பெரும்பான்மையான மாணவர்கள் கலந்து கொண்டு அவர்களின் திறமையினை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு எமது பள்ளியின் முதல்வர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *