வயதை உறுதி செய்ய ஆதார் அட்டை முறையான ஆவணம் இல்லையாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

2 Min Read

புதுடில்லி, அக். 27- ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு, அரி யானா மாநிலம் ரோதக்கை சேர்ந்த ஒருவர் சாலைவிபத்தில் உயிரிழந்தார்.
அவரது மரணத்துக்கு இழப் பீடு கோரி, ரோதக்கில் உள்ள மோட்டார்வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவரு டைய குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

பள்ளி சான்றிதழ் அடிப்படை யில், இறந்தவரின் வயது 45 என்று கணக்கிட்ட தீர்ப்பாயம், அவருடைய குடும்பத்துக்கு ரூ.19 லட்சத்து 35 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தர விட்டது.

அதை எதிர்த்து பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றத்தில் காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆதார் அட்டை அடிப் படையில் கணக்கிட்டால், இறந்த வரின் வயது 47 என்று கூறிய உயர் நீதிமன்றம், இழப்பீட்டு தொகையை ரூ.9 லட்சத்து 22 ஆயிரமாக குறைத் தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து. இறந்த நபரின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். பள்ளிச் சான்றிதழ் அடிப்படையில், இறந்தவரின் வயது 45 தான் என்று அவர்கள் கூறினர்.

இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நேற்று (24.10.2024) பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.

நீதிபதிகள் கூறியதாவது:- 2015ஆம் ஆண்டின், சிறார் நீதி சட்டத்தின் 94ஆவது பிரிவின் படி, பள்ளி சான் றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்ததேதி அடிப்படையில்தான் வயது தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஆதார் அட்டை வழங்கும் தனித்துவ அடையாள ஆணையம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், “ஆதார் அட்டையை அடையாளத்தை உறுதிப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பிறந்த தேதிக்கு அது ஆதாரம் அல்ல” என்று கூறியுள்ளது. ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி இத்தக வலை தெரிவித்துள்ளது. எனவே, வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *