பெரியார் பள்ளி மாணவ, மாணவிகள் கூடைப்பந்து-இறகுப்பந்து போட்டியில் முதலிடம்

1 Min Read

ஜெயங்கொண்டம், அக். 27- பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி அரியலூரில் உள்ள மான் போர்ட் பள்ளியிலும், இறகுப்பந்து போட்டி மாவட்ட உள் விளையாட்டு அரங்கிலும் 25.10.2024 அன்று நடைப்பெற்றது.

ஜெயங்கொண்டம்,ஆண்டிமடம்,தா.பழூர்,செந்துறை,அரியலூர்,திருமானுர் ஆகிய ஆறு குறுவட்டத்தில் வெற்றி பெற்ற 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 17 வயதிற்குட்பட்ட கூடைப்பந்து போட்டியில் முதலிடத்தையும், 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் இறகுபந்து போட்டியில் முதலிடத்தையும், 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில் மூன்றாமிடத்தையும் பிடித்து வெற்றி பெற்று, முதலிடம் பிடித்த இரண்டு அணிகளும் மாநில போட்டியில் பங்குபெற தகுதி பெற்றனர்.

போட்டியில் வென்ற வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர், மற்றும் ரஞ்சனி ஆகியோரை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *