மாசு ஏற்படுவதற்கான ஆதாரங்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

1 Min Read

புதுடில்லி, அக்.27 டில்லியில் மாசு ஏற்படுவதற்கான ஆதாரங்களை ட்ரோன் மூலம் கண்டறியும் சேவையை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் 25.10.2024 அன்று தொடங்கி வைத்தார்.

வாஜிர்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் தூசி, வாகன உமிழ்வு மற்றும் திறந் தவெளியில் கழிவுகள் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு மாசு மூலங்களைச் சமாளிக்க வடிவமைக்கப் பட்ட 21 அம்சங்களைக் கொண்ட குளிர்கால செயல் திட்டம் குறித்துப் பேசினார். மேலும், அவா் பேசுகையில்,
‘மாசுவைக் குறைக்கும் முயற்சிகளில் மக்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும். டில்லி அரசு மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு இரவும் பகலும் அயராது உழைத்து வருகிறது. டில்லியில் மாசு கண்காணிப்பில் ஒரு முன்னேற்றப்படியாக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ட்ரோன்கள் 200 மீட்டா் வரம்புக்குள் மாசு மூலங்களின் ஆதாரங்கள் குறித்து படம் பிடித்து அனுப்பும்.

அதன்படி, தீா்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ட்ரோன்கள் 120 மீட்டா் உயரத்தில் பறக்கும். மாசு அளவுகள் அதிகம் உள்ள பகுதிகளை திறம் பட கண்காணிக்கும் வகையில் ட்ரோன்கள் வடிவமைக்கப்பட் டுள்ளன. மாசு தாக்கத்துக்கு முக்கிய காரணங்களாகக் கண்டறிப்பட்டுள்ள 13 இடங்களைக் கண்காணிப்பதற்கான ஒரு பரந்த முயற்சியை டில்லி அரசு முன்னெடுத்துள்ளது’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *