அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயோ? அரசமைப்புச் சட்டத்தில் இருந்து இந்தியா என்ற சொல் நீக்கப்பட வேண்டுமாம் : கூறுகிறார் பா.ஜ.க. எம்.பி.

1 Min Read

புதுடில்லி,ஜூலை30 – இந்தியா என்ற வார்த்தையை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப் பினர் நரேஷ் பன்சால் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக உறுப்பினர் நரேஷ் பன் சால் இதுகுறித்து மாநிலங்கள வையில் 28.7.2023 அன்று மேலும் கூறியதாவது:

பிரிட்டிஷார் பாரதத்தின் பெயரை இந்தியா என்று மாற்றினார்கள். இதனை 1ஆவது பிரிவின் கீழ் அரசமைப்புச் சட்டம் கூறு கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டு களாக நம் நாடு பாரத் என்ற பெயரில்தான் அறியப்பட்டு வந் தது. இது, நாட்டின் பண்டைய பெயர் என்பதுடன் பழங்கால சம்ஸ்கிருத நூல்களில் அதற்கான சான்றுகளும் உள்ளன.

இந்தியா என்ற பெயர் காலனித் துவ ராஜ்ஜியத்தால் வழங்கப்பட் டது. இது, இன்றளவும் அடிமைத் தனத்தின் சின்னமாக விளங்கு கிறது. எனவே, இந்தியா என்ற பெயரை அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15இல் பிரமதர்  மோடி செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரையில் கால னித்துவத்தின் அனைத்து சின்னங்களும் அழிக்கப்பட வேண்டும் என்று கூறியது கவனிக்கத்தக்கது. இவ்வாறு பன்சால் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *