ஈரோட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

1 Min Read

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மேனாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தார். மேள தாளங்களுடன் கழகத் தோழர்கள் வரவேற்பு அளித்தனர். மேனாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ,செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தமிழர் தலைவர் ஆகியோருக்கு தலைமைக் கழக அமைப்பாளர் த. சண்முகம், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்தனர். (ஈரோடு – 26.10.2024)

திராவிடர் கழகம்

கவுந்தப்பாடிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க. மாவட்ட அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் தி.மு.க. பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். (26.10.2024)

திராவிடர் கழகம்

கோபிசெட்டிபாளையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க. முன்னணி பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு (26.10.2024)

திராவிடர் கழகம்

உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் பெரியார் பெருந்தொண்டர் சீனிவாசன் இல்லத்திற்கு தமிழர் தலைவர் சென்று உடல் நலம் விசாரித்தார். உடன்: குடும்பத்தினர். (26.10.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *