சத்தியமங்கலம் அருகே பழைய ஆசனூரில் இரண்டு நாள்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 125 மாணவர்களுடன் தொடங்கியது

viduthalai
3 Min Read

கோபிசெட்டிபாளையம், அக்.26- கோபிசெட்டிபாளையம் கழக மாவட் டம் சத்தியமங்கலம் தாளவாடி வட்டம் பழைய ஆசனூர் ரிசார்ட்டில் கழக சார்பில் 2024 அக்டோபர் 26,27 இரண்டு நாள்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது.

26-10-2024 சனி காலை 9.30 மணி அளவில் பெரியார் பயிற்சிப் பட்டறை முதல் நாள் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கோபிசெட்டிபாளையம் மாவட்ட கழக செயலாளர் குணசேகரன் தலைமை ஏற்று உரையாற்றினார்.

மாநில மாணவர் கழக துணை செயலாளர் சிவபாரதி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

கோபிசெட்டிபாளையம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் நம்பியூர் மு. சென்னியப்பன், பொதுக்குழு உறுப்பினர் யோகானந்தம், காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் கூடக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.சண்முகசுந்தரம், திமுக மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாவட்ட தலைவர் நம்பியூர் சண்முகசுந்தரம் ,திமுக நெசவாளர் அணி மாவட்ட தலைவர் என்.சி.சண்முகசுந்தரம் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி,மாநில இளைஞரணி துணை செயலாளர் வெற்றி,தலைமை கழக அமைப்பாளர் ஆத்தூர் அ.சுரேஷ், ஈரோடு மாவட்ட காப்பாளர் சிவகிரி சண்முகம், திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் முத்து.முருகேசன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் குபுப்புசாமி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் பயிற்சிப் பட்டறை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மா.அழகிரிசாமி பெரியார் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் முதல் வகுப்பினை தொடங்கினார்.

இந்து,தமிழர்,திராவிடர் என்ற தலைப்பில் முனைவர் க.அன்பழகன், பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பேயாடுதல் சாமியாடுதல் அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் மருத்துவர் இரா.கவுதமன் ,சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் முனைவர் துரை. சந்திரசேகரன் ,தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலடி என்ற தலைப்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசுபெரியார், இந்து இந்துத்துவா, சங்பரிவார்,ஆர்எஸ்எஸ் என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் ஈட்டி கணேசன் ஆகியோர் தொடர்ந்து வகுப்பு எடுத்து வருகின்றனர் நாளையும் வகுப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைத்து வருகிறார்.

மாவட்ட மாணவர் கழக தலைவர் சூர்யா, தஞ்சாவூர் மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநிலத் துணைத் தலைவர் தேக்கம்பட்டி சிவக்குமார், வழக்குரைஞர் அணி மாநில துணை செயலாளர் மதுரை வழக்குரைஞர் கணேசன்,சிவகிரி திமுக க இளஞ்செழியன் தாண்டாம்பாளையம் தா.கு அன்பரசு, மாவட்ட துணை தலைவர் ஆசிரியர் பழனிச்சாமி பகுத்தறிவாளர் கழக செயலாளர் வெள்ளத்துரை, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் விஜயசங்கர், ஆசிரியர்கள் சாந்தி,சீதாலட்சுமி சங்கீதா,செல்லதுரை,சக்திவேல், நம்பியூர் ஒன்றிய தலைவர் பிரசாந்த், கழக சக்தி ஒன்றிய தலைவர் பிரசாந்த், நம்பியூர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சுரேஷ், நம்பியூர் ஒன்றிய செயலாளர் கார்த்தி, கோபி மாவட்டத் துணைத் தலைவர் பொன்.முகிலன், அந்தியூர் ஒன்றிய தலைவர் கணேசன் நம்பியூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் தட்சிணாமூர்த்தி, கோபிசெட்டிபாளையம் ரா. மோகன் குமார் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று உடனிருந்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது நாளையும் நடைபெறும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *