”வந்தே பாரத் ரயில்”: இன்ஜினில் புரோகிராமை மாற்றிய ஊழியர் கைது!

1 Min Read

சேலம், அக். 26- சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டு கோவையில் இருந்து சென்னைக்கும், பெங்களூருவிற்கும் வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் இணைத்து இயக்குவதற்காக வந்தே பாரத் மாற்று இன்ஜின் ஒன்று, எப்ேபாதும் கோவை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த மாற்று வந்தே பாரத் விரைவு வண்டி இன்ஜினில் நேற்று முன்தினம் (24.10.2024) அதிகாலையில், லோகோ பைலட்டுகள் ஏறினர்.

அப்போது, ரயில் இயக்கத்திற்கான புரோகிராம் அனைத்தும் மாற்றி வைக்கப்பட்டிருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லோகோ பைலட்டுகள், உடனடியாக சேலம் கோட்ட இயக்கப்பிரிவு உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அப்போது, அந்த இன்ஜினில் ஒரு நபர் ஏறி, ரயில் இயக்கத்திற்கான புரோகிராமை மாற்றி வைத்திருப்பது தெரியவந்தது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து புரோகிராமை மாற்றிய கோவை ரயில் நிலையத்தில் உள்ள லோகோ பைலட்டுகளுக்கான ஓய்வறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர் ஹரிகரன் (28) என்பவரை ஆர்பிஎப் காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர், குடிபோதையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்ஜினில் ஏறி புரோகிராமை மாற்றி அமைத்தது தெரியவந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *