திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரை கோட்டத்தை இணைப்பதா?-வைகோ கண்டனம்

viduthalai
2 Min Read

திருவனந்தபுரம், அக்.25 திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரை கோட்டத்தை இணைப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், “மதுரை ரயில்வே கோட்டத்தை திரு வனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் இணைப்பதன் விளைவாக தமிழர் களின் வேலைவாய்ப்பு கேரள இளைஞர்கள் வசம் செல்ல வாய்ப் புள்ளது என 22.10.2024 அன்று தமிழ் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. ரயில்வே நிர்வாகத்தின் இச்செயல் கடும் கண்டனத் துக்குரியது. இது குறித்து ஏற்ெகனவே நான் பலமுறை ரயில்வே அமைச் சரை நேரில் சந்தித்தும், நாடாளு மன்றக் கூட்டத்திலும் வலியுறுத்தினேன். நல்ல முடிவு எடுப்பதாக அப் போது உறுதி அளிக்கப்பட்டது.கடந்த ஆண்டு, நாடாளு மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட தென்னக ரயில்வே பொது மேலாளர் உடனான கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்தேன். அப்பொழுதும் நல்ல முடிவினை தெரிவிப்பதாக பொது மேலாளர் கூறினார். மேலும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைகுமார் சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

கடந்த 2003-ஆம் ஆண்டு சேலம் கோட்டம் உருவானபோது, மதுரை கோட்டத்தில் இருந்த பொள்ளாச்சி ரயில் நிலையத்தை பாலக்காடு கோட்டத்துடன் இணைத்தனர். இத னைக் கண்டித்து அப் போதே கடுமையான போராட்டங்களை நடத்தி, தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்தோம். ஆனால் அப்போது இருந்த ஒன்றிய அரசு அதனை ஏற்காமல், பொள்ளாச்சி ரயில் நிலையத்தை பாலக் காடு கோட்டத்தோடு இணைத் தது. மதுரைக் கோட்டத்தோடு பொள் ளாச்சி ரயில் நிலையத்தை இணைப்ப தற்காக தொடர்ந்து போராடி வருகி றோம். எனவே மதிமுக எப்போதும் தமிழர்களையும், தமிழர் நலம் சார்ந்த செயல்களிலும் கூடுதல் கவனம் எடுத்து போராடி வருகிறது.

இதுபோக, கரிவலம்வந்தநல்லூரில் மீண்டும் ஒரு ரயில் நிலையம் அமைக்க வேண்டும், தென் தமிழ்நாட்டின் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் போன்ற தொழில் மற்றும் வியாபார நகரங்களிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு நாள்தோறும் காலை வேளையில் ரயில் மற்றும் கூடுதல் ரயில்களை இயக்க வலியுறுத்தி வருகின்றோம். தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த செயல்களில் மதிமுக சமரச மின்றி போராடி வருகின்றது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரயில்வே கோட்டத்தை இணைப்பதை இந்திய ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *