‘நெக்ஸ்ட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்! மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!

1 Min Read

அரசியல்

புதுடில்லி, ஜூலை30 – நாடாளுமன்ற மக்­களவையில் விதி எண் 377இன் கீழ், ‘நெக்ஸ்ட்’ தேர்வை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார். இதுபற்றி அவர் தெரிவித்து இருப்பதாவது:- 

தேசிய மருத்துவ ஆணையத்தின் முரண்பட்ட தகவல்களால் தேசிய வெளியேறும் தேர்வில் (நெக்ஸ்ட்) ஒரு குழப்பமான சூழல் மாணவர் களிடையே தொடர்கிறது. 

கடந்த  2019ஆம் ஆண்டு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு மாதிரித் தேர்வு அறிவிக்கப்பட்ட து, சொல்லப்போனால் மாணவர்­கள்மீது அது திணிக்­கப்பட்டது. அது விடைகளில் ஒன்றை தேர்ந் தெடுக்கும் கேள்வி முறை ஆகும். தேர்வுக்கு படிக்கும்போது, மாண வர்­கள் மருத்துவப் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெ னில் தற்போதைய பல்­கலைக்கழக பாடத்திட்டம் செய்முறை மற்றும் கல்வியறிவு இரண்டையும் மதிப் பிடுகிறது. 

இதுமட்டுமின்றி மாணவர்­கள் ‘நெக்ஸ்ட்’ தேர்வுக்காக பயிற்சி மய்யங்­களையும் நாட வேண்டி யிருக்கும். இது மாணவர்­களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். எனவே இந்த தேர்வை திரும்பப் பெறக்கோரி தஞ்சாவூர், சென்னை, திருவாரூர் மற்றும் திருச்சி மருத் துவக்­கல்லூரி மாணவர்­கள் இந்த மாத தொடக்­கத்தில் ஆர்ப்பாட் டம் நடத்தினர். 

தமிழ்நாடு அரசு ‘நீட்’ தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தநிலையில் அதில் மேலும் ஒரு தேர்வை சேர்ப்பது முற்றிலும் தேவையற்றது. ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே நெக்ஸ்ட் தேர்வுக்கு தடை விதிக்கவேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தேர் வுகளை அறிமுகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். 

-இவ்வாறு மக்களவை உறுப் பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *