ஆளுநர் பங்கேற்ற மதுரை காமராஜர் பல்கலை.,யின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதன் அடிப்படையில், சில விழாக்களில் அவருடன் பங்கேற்றோம் என்ற அவர், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநரின் சொல்லும் செயலும் தமிழர் மனதை புண்படுத்துவதால், அவரை புறக்கணிக்க முடிவு செய்தோம் என்றார்.