இரண்டு மனைவிகள் இருந்தால் யாருக்கு ஓய்வூதியம்? புதிய நடைமுறை உருவாகுகிறது

2 Min Read

சென்னை, அக். 24- ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 2 மனைவிகள் இருந்தால் யாருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதில் ஒன்றிய அரசு புதிய நடைமுறையை அமல் படுத்தி உள்ளது.

ஒன்றிய அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவரது மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை அவர்கள் இறந்து இருந்தால் தகுதி இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.

இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. அதுவே 2ஆவது மனைவியும் குடும்ப ஓய்வூதியம் உரிமை கோரும் போது பிரச்சினை ஏற்படுகிறது.

திருமண சட்டம்

இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே போல் ஒவ்வொரு வழக்குகளிலும் ஒவ்வொரு விதமான தீர்ப்புகள் வருகின்றன. முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாம் மனைவியை திருமணம் செய்யக் கூடாது என்று திருமணச்சட்டம் சொல்கிறது. இதே சட்டத்தைக் ஒன்றிய அரசின் ஓய்வூதிய விதிகள் 2021ஆம் ஆண்டும் உறுதி செய்கிறது. இந்த நிலையில் ஓய்வூதியத் துறை அனைத்து ஒன்றிய அரசு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 2 மனைவிகள் இருந்தால், இரண்டாம் திருமணம் சட்டபூர்வமானதா? என்று சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை செய்ய வேண்டும். அதில் ஒவ்வொரு வழக்கும் தனிப்பட்ட அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இரண்டாம் திருமணத்தின் சட்டப்பூர்வ நிலை தீர்மானிக்கப்பட்ட பிறகே ஓய்வூதியம் வழங்குவது முடிவு செய்யப்படும்.

சட்டப்பூர்வ நிலை

இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறும் போது, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது 2ஆவது திருமணம் எப்படி சட்டப் பூர்வமானதாக இருக்கும். இது ஏற்கெனவே உள்ள குடும்ப ஓய்வூதிய சட்டத்தின் விதிகளை மீறுவது போல் உள்ளது.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அவருக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்வது முற்றிலும் குற்றம். எனவே இந்த விவகாரத்தில் 2ஆம் திருமணத்தை சட்டப்பூர்வமானதா என அலசி ஆராய்வது தேவையற்ற செய்ய செயல் என்றனர்.

தற்போது ஒன்றிய அரசு ஊழியரின் இறுதி ஊதியத் தின் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். தற்போது குறைந்த பட்சமாக ரூ.3,500ஆம், அதிக பட்சமாக ரூ.27 ஆயிரம் வரையும் ஓய்வூதியம் வழங்கப் படுகிறது.

ஆனால், அதில் சில விதிவிலக் குகள் உள்ளன. இது ஊழியர்கள் 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி ஊதியத்தின் 50 சதவீதம் வரை அதிகரிக்கும். பெற்றோர்கள் தாய், தந்தை என இருவரும் உயிருடன் இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி ஊதியத்தின் 75 சதவீதம் வரை வழங்கப்படும்.
பெற்றோரில் ஒருவர் மட்டும் உயிருடன் இருந்தால் 60 சதவீதம் வரை வழங்கப்படும். ஊழியர்கள் பணி நேரத்தில் இறந்தால், 10 ஆண்டுகள் 50 சதவீதம் இறுதி ஊதியத்துடன் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு பின்னர் அது 30 சதவீதம் குறைக்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *