அருந்ததியர் சமூகத்துக்கு வி.சி.க. எதிரானது அல்ல! கிருஷ்ணசாமிக்கு திருமாவளவன் பதிலடி!

1 Min Read

புதுச்சேரி, அக்.24- விடுதலை சிறுத் தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புதுச்சேரியில் நேற்று (23.10.2024) அளித்த பேட்டி:
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அண்மையில் செய்தியா ளர் சந்திப்பின்போது, திட்டமிட்டு அவதூறு பரப்பி இருக்கிறார். அவரே ஆட்களை ஏற்பாடு செய்து கேள்வி கேட்க வைத்து அதற்கு அவர் விளக்கம் சொல்கிறார். தன்னிச்சையாக செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்வியாக அது இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திட்டமிட்டு களங்கத்தை ஏற்ப டுத்த வேண்டுமென்ற உள்நோக்கம் இதில் வெளிப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் எந்த வகையிலும், எந்த சமூகத்துக்கும் குறுகிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் எதிராக அல்லது ஆதரவாக ஜாதியவாத அடிப்படையில் செயல்பட்டதில்லை. தொடக்கத்தில் இருந்தே விடுதலை சிறுத்தைகள், அருந்ததியர் சமூகத்துக்கு எதிரானது என்பது போன்ற ேதாற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். அதில் உள்நோக்கம் இருக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் நீதிமன்றமே கண்டிக்கும் வகையில் இருப்பது வேதனைக்குரியது. நடிகர் விஜய்யின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *