ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாநில எறிபந்து போட்டிக்கு தேர்வு

1 Min Read

ஜெயங்கொண்டம், அக்.23- பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப் பெற்ற அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் 17.10.2024 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளியின் 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ/ மாணவிகள் சுமார் 432 பேர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு

இப்போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் பெரியார் பள்ளி மாணவர்கள் முதலிடமும், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் மூன்றாம் இடமும் பிடித்தனர். முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பெரியார் பள்ளி முதல்வர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பேசுகையில் இப்பள்ளி, கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் மிக சிறப்பாக பங்காற்றி வருகிறது என்று குறிப்பிட்டார்.

போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ்,
ஆர்.ரவிசங்கர் மற்றும் ஆர்.ரஞ்சனி ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *