தமிழ்நாடு புலவர் குழுத் தலைவராக விஅய்டி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தேர்வு

1 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 31- முத்தமிழ்க் காவலர் என போற்றப்பட்ட கி.ஆ.பெ.விசுவநாதம் 65 ஆண்டுக ளுக்கு முன்னர் தொடங்கிய தமி ழகப் புலவர் குழுவின் 115-ஆவது கூட்டம் சென்னையில் 29.7.2023 அன்று நடைபெற்றது. அமைப்பின் காப்பாளர் நீதிபதி வள்ளிநாயகம், துணைத் தலைவர்கள் கவிஞர் வா.மு.சேதுராமன், மறைமலை இலக்குவனார் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

பொதுச் செயலர் மணிமேகலை கண்ணன் வரவேற்றார் தலை வராகப் பொறுப்பு வகித்த அவ்வை நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவரது படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, தமிழகப் புலவர் குழு புதிய தலைவராக விஅய்டி பல்கலைக்கழக வேந்தரும், தமி ழியக்க தலைவருமான கோ.விசுவநாதன் ஒருமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

கூட்டத்தில், நீதிபதி பாஸ்கரன், தொழிலதிபர் விஜிபி சந்தோஷம், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை ந.அருள், கி.அ.பெ.கதிரேசன், திரைப்பட தயாரிப் பாளர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் நாடு முழுவதும் இருந்து வந்திருந்த புலவர்கள், எழுத்தாளர்கள், பேரா சிரியர்கள் உள்பட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *