இழிவை சுமத்தும் இதிகாச புராணங்கள் – சிந்தனையரங்கம்

1 Min Read

உரத்தநாடு, அக். 23- உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக சார்பில் நடைபெற்ற இழிவை சுமத்தும் இதிகாச புராணங்கள் என்ற தலைப்பில் சிந்தனையரங்கம் உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.செகநாதன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றி னார்.
தொடக்கிவைத்து சிறப்பாக உரையாற்றிய மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்.சி.அமர்சிங்கிற்கு சட்டக்கல்லூரி மாணவர் த.அன்புவீரமணி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். உரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம் தலைமையேற்றார்.

ஒன்றிய கழக தலைவர் த. ஜெகநாதன், ஒன்றிய துணைத் தலைவர் நெடுவை கு.நேரு ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு குணசேகரன், மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூர் பாண்டியன், பெரியார் பிஞ்சுகள் தெ.நாவ லன், க.புகழினி ஆகியோர் உரையாற்றினர்.
திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் க.கவிபாரதி நன்றி கூறினார்.

கூட்டத்தில் பெரியார் வீர விளை யாட்டு கழக மாநில செயலாளர் நா.ராம கிருஷ்ணன், இந்திய தேசிய காங்கிரஸ் மாநில செயலாளர் செ.சாமிநாதன், மாவட்ட வழக்குரைஞர் அணி செயலா ளர் க.மாரிமுத்து, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.இராமலிங்கம், ஒன்றிய விவசாய அணி செயலாளர் க. அறிவரசு, ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் துரை. தன்மானம், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ.ரஞ்சித்குமார், ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் ர.நிரஞ்சன் குமார், ஒக்கநாடு மேலையூர் கிளைகழக செயலாளர் நா. வீரத்தமிழன், மா.தென்னகம், பொறியாளர் ப.பாலகிருஷ்ணன், க.மாணிக்கவாசகம், பெரியார்நகர் வெ.சக்திவேல் உள்ளிட்ட கழகத் தோழர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தீபாவளி உள்ளிட்ட ஆபாச, அறிவுக் கேடான பண்டிகைகளை புறக்கணிப்போம் என மாணவர்கள் உறுதி கூறினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *