மறைவு

Viduthalai
1 Min Read

சங்கராபுரம் நகர திராவிடர் கழக தலைவராய் இருந்தவரும்,1995-இல் இந்நகரத்தில் தந்தை பெரியார் சிலையை நிறுவி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் சிலை திறந்து விழா எடுக்க சிறப்பான ஒத்துழைப்பை அளித்தவரும், மேனாள் சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவராய் இருந்தவரும் ஆகிய தில்லை கோதண்டம் நேற்று (22.10.2024) செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாவட்டக் காப்பாளர் ம.சுப்பராயன் தலைமையில் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் அ.கரிகாலன், சங்கராபுரம் ஒன்றிய கழகத் தலைவர் பெ.பால சண்முகம், ரிஷிவந்தியம் ஒன்றிய கழக தலைவர் அர. சண்முகம் சங்கராபுரம் நகர கழகத் தலைவர் கலை. அன்பரசு, சங்கராபுரம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆ.இலட்சுமிபதி ஆகியோர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *