பெரியார் பாலிடெக்னிக்கில் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம்

1 Min Read

வல்லம், அக். 22- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமின் பிறந்த நாளில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அறிவியல் அறிஞரும், மேனாள் குடியரசுத் தலைவருமாகிய ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் “இளைஞர்களின் எழுச்சி” நாளாக கொண்டாடப்பட்டது. அதனையொட்டி மாணவ மாணவி களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி ஆகியவை நடைபெற்றது.

15.10.2024 அன்று இக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா தலைமையுரை வழங்கினார். டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்த அவர் அப்துல்கலாம் அவர்களின் சிந்தனைகளை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங் கப்பட்டன.
இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியர் ஆர்.அய்ய நாதன் அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாத னைகளை பற்றிய உரை நிகழ்த்தினார். இக்கருத்தரங்கை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் ஆர்.மணிவண்ணன், ப.முத்துக்குமாரபதி மற்றும் ஞா.செங்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *