1,889 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஈரோடு, அக்.22- ஈரோட்டில் பல்வேறு துறைகளின் சாா்பில் 1,889 பயனாளிகளுக்கு ரூ. 3.15 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஈரோடு மாவட்டத்தில் 43,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்வில் அந்தியூா் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையா் என்.மணீஷ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கஸ்தூரி, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகம்மது குதுரத்துல்லா, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் பெ.இளங்கோ, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராஜ்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா், தாட்கோ மேலாளா் அா்ஜுன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா் ஆா்.பி.மோகன் உட்பட தொடா்புடைய துறை அலுவலா்கள், பயனாளிகள் பங்கேற்றனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *