புதுச்சேரி, அக்.22 கல்வி கற்பதன் மூலமே தமிழர்கள் உலகில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று வி.அய்.டி. வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் தமிழியக்கத்தின் 7-ஆம் ஆண்டு ஏணை விழா காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் மாநாட்டு அரங்கத்தில் 20.10.2024 அன்று நடைபெற்றது.
நிகழ்வுக்கு தமிழியக்க நிறுவ னத் தலைவரும், வி.அய்.டி. வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:
‘‘கவிஞர் பாரதிதாசனை அழைத்து கல்லூரி நாள்களில் தமிழ் மன்றத்தில் பேச வைத்த அனுபவம் உண்டு. சமத்துவம், ஜாதி இன்மை, தமிழ் என பாரதிதாசன் பாடினார். அவரது பாடல்களை தமிழர்கள் படிப்பது அவசியம். ஆனால், தற்போது சம தர்மத்தை விடுத்து முதலாளித்துவத்தை நோக்கிச் செல்வது கவலையளிக்கிறது.
உலகின் ஏழு மூத்த மொழி களில் தமிழ் மட்டுமே மாறாத மொழியாக வழக்கில் உள்ளது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலை அய்க்கியநாடுகள் மன்றமே ஏற்றுக் கொண்டுள்ளது பெருமையளிப்பதாகும். தமிழின் பழைமையின் பெருமையை அறிந்து தமிழர் வாழ வேண்டும் என்பதே தமிழியக்கத்தின் நோக்கம்.
உயர் கல்வியை தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் உலக அளவில் தமிழர்களால் ஆதிக்கம் செலுத்த முடியும். உலகில் 75 நாடுகள் உயர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், நமது ஒன்றிய, மாநில அரசுகள் உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.
ஆனால், வடமாநிலங்களைவிட தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உயர்கல்வி கற்றவர்கள் சதவீதம் கூடுதலாகவே உள்ளது. நாட்டின் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பது முக்கியமாகும்’’ என்றார்.
முன்னதாக, இயக்கத்தின் புதுவை மாநிலச்செயலர் சீனு.மோகன்தாஸ் வரவேற்றார். மேலாண்மைக் குழு உறுப்பினர் வி.முத்து தொடக்கவுரையாற் றினார்.
நிகழ்ச்சியில் புதுவை சட்டப் பேரவைத் தலைவர் ஆர்.செல் வம், பொதுப் பணித்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன், புதுவை மாநில சட்டமன்ற உறுப்பினர் எல்.கல்யாணசுந்தரம் தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் ம.தனசேகரன், மத்தியப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் (பொ) க.தரணிக்கரசு, புதுச்சேரி கம்பன் கழகச் செயலர் வே.பொ.சிவக்கொழுந்து, புதுவை மாநில கலை, பண்பாட்டுத் துறை இயக்குநர் வி.கலியபெருமாள், இயக்குநர் மு.இளங்கோவன், கவிஞர் பாலசுப்பிரமணியன் உள் ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் இசையரங்கம், நாடக அரங்கம், கருத்தரங்கம், விருதரங்கம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் பாங்கறிமண்டபம் எனும் பிரிவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் அப்துல் காதர் தலைமையில், பார்திருத்தம் அடையச் சீர்திருத்தம் பாடிய தில் முன்னிற்பது தேசிய இயக் கமே, திராவிட இயக்கமே, பொதுவுடமை இயக்கமே, பக்தி இயக்கமே ஆகிய தலைப்புகளில் அறிஞர்கள் பேசினர்.
விருதரங்கத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு ரூ.ஒரு லட்சம் பொற்கிழியுடன் விருதை கோ.விசுவநாதன் வழங்கினார்.