முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ஆசிரியர் வீ. கண்ணையன் அவர்களின் மறைவுக்கு இரங்கல்

1 Min Read

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், நீண்ட கால பகுத்தறிவாளர் கழகத் தினுடைய செயல் வீரரும் கொள்கையாளருமான ஆசிரியர் மானமிகு
வீ. கண்ணையன் அவர்கள் நேற்று (20.10.2024) மாலை புதுச்சேரியில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகின்றோம். வைத்தீஸ்வரன் கோவிலில் தந்தை பெரியார் சிலை அமைப்பதற்குக் காரணமானவர்களில் ஒருவரும், மயிலாடுதுறை மற்றும் சென்னை பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்து சிறப்பாக பணியாற்றிய வருமான நல்லாசிரியர் மானமிகு கண்ணையன் அவர்களின் மகள்கள் பத்மா சந்தானகிருஷ்ணன், தேன்மொழி ராமசாமி ஆகியோருக்கும், அவர்களின் மறைவால் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது சகோதரர் தலைமை கழக அமைப்பாளர் திருவாரூர் வீ. மோகன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அண்மையில் புதுச்சேரி சென்றபோது அவரது உடல் நலனை விசாரித்து வந்தோம்; முதுமை காரணமாக மறைவுற்ற தோழர் அவர்களுக்கு புதுவை மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துகிறார்கள்.

கிவீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
21.10.2024 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *