தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு 2.44 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

Viduthalai
1 Min Read

சென்னை, அக். 21- கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் 2022ஆம் ஆண்டு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு எனும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்தது.
இந்த திட்டத்தின்படி அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வித மான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, அய்சிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயி லும் மாணவர்களுக்கு 2022ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந் தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை தரப்படும்.
இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர் களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாண வர்களும் தேர்வு செய்யப் படுவர்.
அதன்படி நடப்பாண் டுக்கான திறனாய்வு தேர்வு 19.10.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் 885 மய்யங்களில் நடை பெற்றது. இத்தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.
தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு அடுத்த வாரம் வெளியிடப் பட உள்ளது.

இதுசார்ந்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள் ளலாம். மேலும், விடைத் தாள் திருத்துதல் பணிகளை துரிதமாக முடித்து முடிவுகளை விரைந்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் அமைக்கப்பட் டிருந்த மய்யத்தை பள்ளிக் கல்வித் துறை இயக் குநர் ச.கண்ணப்பன் பார்வை யிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *