திருச்சி மாநாடு: முதல் பணிக்குழு கூட்டம்

Viduthalai
3 Min Read

திருச்சி, அக். 21- கடந்த 18.10.2024 வெள்ளி இரவு 8.10 மணிக்கு 2024 டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெற இருக்கும் அகில இந்திய மனிதநேயர், பகுத்தறிவாளர், நாத்திகர், சுதந்திர சிந்தனையாளர் மாநாட்டு பணிக்குழுவின் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா தமிழ்ச் செல்வன் தலைமை ஏற்றார். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் செல்வ மீனாட்சி சுந்தரம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தலைவர் தனது முன்னு ரையில் மாநாடு சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தொகுத்துக் கூறினார்.

தொடர்ந்து குழுவினுடைய கருத்துக்கள் கேட்கப்பட்டது மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் செல்வ மீனாட்சி சுந்தரம் பதிவுகள் செய்வது பற்றி எடுத்துக் கூறினார். மிக விரைவில் பதிவுகளை செய்து முடிக்க வேண்டும் என்பதையும் வெளி மாநில தொடர்புகள் பற்றியும் பேசினார்.
தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் சந்திரன் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நாத்திக மாநாட்டு அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, இந்த மாநாட்டையும் மிகச் சிறப்பாக நடத்திட முடியும் என்று ஊக்க மூட்டினார். திருச்சி விமான நிலையத்தில், திருச்சி ரயில்வே சந்திப்பு நிலையத்தில் மாநாடு தொடர்பான இருக்கை அமைப்பது பற்றி பேசினார்.

ஆவடி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தான் ஒரு வாரம் இதற்காக ஒதுக்கி உள்ளதாகவும், வெளிமாநில தொடர்புகள் மட்டுமின்றி எல்லா வேலைகளையும் செய்வதாகவும் எடுத்துக் கூறினார்.
அதனை தொடர்ந்து மாநில அமைப் பாளர் கோபு பழனிவேல் திருச்சியில் சந்திக்க வேண்டிய நபர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து உடனடியாக அவர் களை சந்தித்து நிதி திரட்டுவது, மாநாட்டு ஆதரவு திரட்டுவது பற்றி பேசினார். திருச்சியை சுற்றியுள்ள மாவட்டங்களில் சுவரெழுத்து பிரச்சாரம் பற்றியும் எடுத்துக் கூறினார்

திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மலர்மன்னன் திருச்சியில் விளம்பரம் செய்வது பற்றியும், நிதி சேர்த்தல் பற்றியும், திருச்சியில் உள்ள பல்வேறு அமைப்புகள் பற்றி விவரங்களை சேகரிப்பது பற்றியும் எடுத்துரைத்தார்.
பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் இளவரசி சங்கர் மகளிர் ஒருங்கிணைப்பு பணியை தான் திறம்பட செய்து முடிப்பேன் என்று உறுதி கூறினார். சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வீரமணி ராஜு மாநாட்டுக்கு நிதி திரட்டுவது பற்றியும், மாநாட்டு ஏற்பாடுகள் பற்றியும் பேசினார்.

பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலா ளர் தமிழ் பிரபாகரன் இந்த மாநாடு நம்ம மாநாடு என்ற உணர்வோடு ஒவ் வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
பேராசிரியர் அருட்செல்வன் தான் மாநாட்டு நிகழ்வு வெற்றி பெற முழு ஒத்துழைப்பு நல்குவதாக கூறினார். மாநாட்டு பணிகளை சிறப்பாக முன்னெடுத்து செல்ல எல்லாவகையிலும் உதவியாக இருப்பேன் என்றார்.
பொதுச் செயலாளர் வி.மோகன் மாநாட்டு நிதி திரட்டி முதலில் அளித்த பொதுச்செயலாளர் வெங்கடேசனுக்கு வாழ்த்து தெரிவித்து, மாநாட்டில் பதிவு பற்றிய தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.

நிதி திரட்டுவது என்பது முதன்மையான பணி என்பதையும் எடுத்துச் சொல்லி, நிதி எப்படி திரட்ட வேண்டும் என்பதையும் எடுத்து கூறினார்.
இறுதியாக தலைவர் பொருள், திரள், நிரல் பற்றி விரிவாக கூறி, இன்னும் இந்த குழு விரிவடையும் என்பதைச் சொல்லி அனைவரும் இந்த மாநாடு ஒத்துழைக்க தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோளை விடுத்து முடித்தார்.
பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *