தேவநேய பாவாணர் மகனின் உடலுக்கு மரியாதை ஆசிரியரின் இரங்கல் அறிக்கை வழங்கப்பட்டது

1 Min Read

திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் அருமை மகன் மணிமன்றவாணன் மறைவையொட்டி, மேற்கு கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள தேவநேயப் பாவாணர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மலர் மாலை வைத்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையை அவரது இணையர் மற்றும் மகனிடம் வழங்கி ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாநில இளைஞரணித் துணைச்செயலாளர்கள் சோ.சுரேஷ், மு.சண்முகப்பிரியன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த கரு.அண்ணாமலை, தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ந.மணிதுரை, பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் பொருளாளர் ஜனார்த்தனன், மயிலாப்பூர் பெரியார் யுவராஜ், எம்ஜிஆர் நகர் தோழர்கள் மணி மொழியன், தம்பி, டெய்லர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *