தேவநேய பாவாணர் மகனின் உடலுக்கு மரியாதை ஆசிரியரின் இரங்கல் அறிக்கை வழங்கப்பட்டது

Viduthalai
1 Min Read

திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் அருமை மகன் மணிமன்றவாணன் மறைவையொட்டி, மேற்கு கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள தேவநேயப் பாவாணர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மலர் மாலை வைத்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையை அவரது இணையர் மற்றும் மகனிடம் வழங்கி ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாநில இளைஞரணித் துணைச்செயலாளர்கள் சோ.சுரேஷ், மு.சண்முகப்பிரியன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த கரு.அண்ணாமலை, தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ந.மணிதுரை, பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் பொருளாளர் ஜனார்த்தனன், மயிலாப்பூர் பெரியார் யுவராஜ், எம்ஜிஆர் நகர் தோழர்கள் மணி மொழியன், தம்பி, டெய்லர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *