தி.மு.க.மீது சேற்றை வாரி இறைப்பதா? அமித்ஷாவிற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

1 Min Read

அரசு, தமிழ்நாடு

ராணிப்பேட்டை, ஜூலை 31- ஊழல் மிகுந்த கட்சி என்ற அமித்ஷாவின் கருத்து தி.மு.க. மீது சேற்றை வாரி இறைப் பது போல் உள் ளது என்று அமைச் சர் துரைமுருகன் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் உள்ள தனியார் விடுதியில், தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்த லுக்கு முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த கட்சி தி.மு.க. என்ற அமித்ஷாவின் கருத்து அவரது தரத்திற்கு உகந்த பேச்சு அல்ல. இந்த குற்றச்சாட்டு தி.மு.க.வின் மீது சேற்றை வாரி இறைப்பது போல் உள்ளது. பொத்தாம் பொதுவாக ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை பாரதீய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர். அப்படி பார்த்தால் அவர்கள் கட்சியில் எத்தனை பேர் ஊழல் செய்திருக்கிறார்கள் என பட்டியல் போட்டுத்தர நாங்களும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *