ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஆவடி, அக். 20- நவம்பர் 26 அன்று ஈரோட்டில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்பது என்று ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.
ஆவடி பெரியார் மாளிகையில் 13-10-2025 அன்று மாலை 5.30 மணி அளவில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தலைமை வகித்தார். அவரது உரையில் இளைஞரணி தோழர்கள் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் எ.கண்ணன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட செயலாளர் க.இளவரசன் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தோழர் சோ.சுரேஷ் தொடக்க உரையாற்றினார். அவரது உரையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயக்க செயல்பாடுகளையும், இளைஞரணி பங்களிப்புகளையும் மேலும் ஆற்ற வேண்டிய பணிகளையும் எடுத்துரைத்தார். தலைமை கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், கருத்துரையாற்றினார். அவரது உரையில் இன்றைய அரசியல் சமூகச் சூழலில தந்தை பெரியாரின் கருத்துகள பரவ வேண்டிய தேவைகளையும் திராவிடர் கழக இளைஞர்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும் எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர்கள் இரகுபதி, வை.கலையரசன், மாவட்ட துணைச் செயலாளர் உடுமலை வடிவேல், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் க.கார்த்திகேயன், மாவட்டத் துணைத் தலைவர் ஜெயராமன், திராவிடர் தொழிலாளர் கழக மாவட்டத் தலைவர் கி. ஏழுமலை, ஆவடி மாநகரத் தலைவர் கோ.முருகன், செயலாளர் தமிழ்மணி, மதுரவாயல் பகுதி தலைவர் வேலுச்சாமி, திருமுல்லை வாயில் தலைவர் இரண்யன், சோ.பாலு மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி, ஆவடி வஜ்ரவேலு, கோயில்பதாகை நடராசன், அம்பத்தூர ஆ.வெ. நடராசன், இளைஞரணி தோழர்கள் பூவை சு.வெங்கடேசன், பா.இரா.கலைவேந்தன், சிலம்பரசன், சென்னக்கிருஷ்ணன், ரா.பிரபாகரன், கா. சின்னத்துரை, ச.பசுபதி உள் ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்
இரங்கல் தீர்மானம்
திராவிடர் இயக்க மூத்த ஊடகவியலாளரும், முரசொலி ஆசிரியருமான முரசொலி செல்வம், அறிவியல் செயல்பாட்டாளர் பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை நிறுவனர் பெ. செந்தமிழ்ச்செல்வன் சேகுவேரா, ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் சோபன்பாபு அவர்களின் மாமனார் ஆர்.மனோகரன் ஆகியோர் மறைவுக்கு இக்கூட்டம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
உலகத் தலைவர் தத்துவத் தலை வர் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் மகிழ்வாக ஆவடி மாவட்ட இளைஞரணி சார்பாக நகரங்கள், கிராம வாரியாக புதிய கிளைகள் அமைத்து கழகக் கொடியை ஏற்றி மகிழ்வது என தீர்மானிக்கப்படுகிறது.
ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஆவடி மாவட்டத்தில் தொடர்ச்சியாக தெருமுனை பிரச்சாரம் துண்டறிக் கைப் பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
ஆவடி மாவட்டம் முழுவதும் கழக இளைஞரணி, அமைப்பை புதுப்பித்து மேலும். ஏராளமான இளைஞர்களை, இணையச் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே, பகுத்தறிவு நாளேடான விடுதலை ஏட்டை அனைவரிடம் சேர்க்கும் விதமாக இளைஞரணி சார்பில் அதிக விடுதலைச் சந்தாக்களை வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 26 ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரிரியர் தலைமையில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் இளைஞரணி பெருந்திரளாக கலந்துகொள்வோம் என தீர்மானிக்கப்படுகிறது.
இறுதியாக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சென்னகிருட்டிணன் நன்றி கூறினார். ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.