திராவிடர் கழக தஞ்சாவூர் மாநகர தலைவர் பா.நரேந்திரன்,மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர இணைச்செயலாளர் இரா. வீரக்குமார், மாநகரத் துணைத் தலைவர் அ.டேவிட்,மருத்துவக் கல்லூரி பகுதி தலைவர் த.கோவிந்தராஜ், புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி. கலைச்செல்வன், ஈ.பி காலனி பகுதி தலைவர் துரை.சூரியமூர்த்தி,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத்தலைவர் முனைவர் ந. எழிலரசன், தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ. பிரகாஷ், இளைஞர் அணித் தோழர் சூ.வீரமணி.பகுத்தறிவாளர்கழக மாநில ஊடகப் பிரிவு தலைவர் மா. அழகிரிசாமி, பெரியார் பிஞ்சுகள் எ.அஞ்சுகச்செல்வன், வீ.இனியா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வைக்கு பதிலாக பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கி மகிழ்ந்தனர். தஞ்சாவூர் மாநகரத்தில் கழக செயல்பாடுகள் குறித்து தமிழர் தலைவர் ஆசிரியருடன் உரையாடினர். தஞ்சாவூர் மாநகரத்தில் நான் மாணவர் பருவத்திலேயே தற்போது தொல்காப்பியர் சதுக்கம் (தொம்பன் குடிசை) வண்டிகாரத்தெரு, கீழவாசல், பள்ளி அக்ரஹாரம், கரந்தை, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பலமுறை பேசி உள்ளேன். அந்தப்பகுதிகளில் எல்லாம் தொடர்ந்து கூட்டங்களை நடத்துங்கள் என்று மாநகர திராவிடர் கழக பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். சிறிது நேரம் உரையாடிய பின் மகிழ்வுடன் விடைபெற்றனர். உடன் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன் மற்றும் திமுக மருத்துவரணி மாநில துணைச் செயலாளர், தஞ்சாவூர் மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களும் அவரது வாழ்விணயர் திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. வெற்றிகுமாரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து மகிழ்ந்தனர் (19-10-2024-தஞ்சாவூர்).
தஞ்சை மாநகர திராவிடர் கழக பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:இரா.ஜெயக்குமார்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books