தஞ்சை மாநகர திராவிடர் கழக பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு

viduthalai
1 Min Read

திராவிடர் கழக தஞ்சாவூர் மாநகர தலைவர் பா.நரேந்திரன்,மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர இணைச்செயலாளர் இரா. வீரக்குமார், மாநகரத் துணைத் தலைவர் அ.டேவிட்,மருத்துவக் கல்லூரி பகுதி தலைவர் த.கோவிந்தராஜ், புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி. கலைச்செல்வன், ஈ.பி காலனி பகுதி தலைவர் துரை.சூரியமூர்த்தி,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத்தலைவர் முனைவர் ந. எழிலரசன், தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ. பிரகாஷ், இளைஞர் அணித் தோழர் சூ.வீரமணி.பகுத்தறிவாளர்கழக மாநில ஊடகப் பிரிவு தலைவர் மா. அழகிரிசாமி, பெரியார் பிஞ்சுகள் எ.அஞ்சுகச்செல்வன், வீ.இனியா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வைக்கு பதிலாக பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கி மகிழ்ந்தனர். தஞ்சாவூர் மாநகரத்தில் கழக செயல்பாடுகள் குறித்து தமிழர் தலைவர் ஆசிரியருடன் உரையாடினர். தஞ்சாவூர் மாநகரத்தில் நான் மாணவர் பருவத்திலேயே தற்போது தொல்காப்பியர் சதுக்கம் (தொம்பன் குடிசை) வண்டிகாரத்தெரு, கீழவாசல், பள்ளி அக்ரஹாரம், கரந்தை, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பலமுறை பேசி உள்ளேன். அந்தப்பகுதிகளில் எல்லாம் தொடர்ந்து கூட்டங்களை நடத்துங்கள் என்று மாநகர திராவிடர் கழக பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். சிறிது நேரம் உரையாடிய பின் மகிழ்வுடன் விடைபெற்றனர். உடன் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன் மற்றும் திமுக மருத்துவரணி மாநில துணைச் செயலாளர், தஞ்சாவூர் மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களும் அவரது வாழ்விணயர் திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. வெற்றிகுமாரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து மகிழ்ந்தனர் (19-10-2024-தஞ்சாவூர்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *