திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா முன்னிலையில் வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம் இல்ல மணவிழா – வரவேற்பு

viduthalai
1 Min Read

சென்னை, அக். 19- வடசென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் கி.இராமலிங்கம்-இரா.இலட்சுமி, போரூர் கலாவதி ரங்கநானின் மகன் இரா.ஹேமந்த்குமார் ஆகியோரது மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தமையில், இந்து சமய அறநிலையத் துறை (மற்றும்) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அமைச்சர், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு, சென்னை பெருநகர மேயர் பிரியா முன்னிலையில், 23.10.2024, புதன்கிழமை மாலை 5 மணிக்கு பெரியார் நகர், கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் கூட்டுறவு திருமண மாளிகையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத் தலைவர் ப.ரங்கநாதன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரிராஜன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி, மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி, திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியின் ஆணைய உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கொளத்தூர் கிழக்கு, மேற்குப் மாவட்ட செயலாளர்கள் அய்.சி.எப்.வ.முரளிதரன், எ.நாகராசன், 67ஆவது வட்ட சென்னை பெருநகர உறுப்பினர் எம்.தாவூத்பீ, வடசென்னை மாவட்ட கிழக தலைவர் தளபதிபாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், திராவிடர் கழக வழக்குரைஞர் இரா.இரத்தினகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

பேராசிரியர் வி.டெய்சி மணியம்மை இணைப்புரை வழங்குகிறார். நிறைவாக கழக பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன் நன்றி நவிழ்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *