கோலாலம்பூர் நகரில் மலேசிய திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

1 Min Read

கோலாலம்பூர், அக்.19– மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நகரில் மலேசிய திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழாவும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவும் கோலாலம்பூர் ப்ரீக்பீல்ட் குக்குள் தங்கான் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமை கழக அமைப்பாளர் கே எம் சிகாமணி அவர்களும், ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சி. கிருஷ்ணவேணி அவர்களும் கலந்து கொண்டனர். மலேசிய மாந்தநேய திராவிட கழக தேசிய தலைவர் நாகப்பஞ்சு, மேனாள் மாநிலத் தலைவர் இரேசு முத்தையா ஆகியோர் சிறப்பாக கலந்து கொண்டனர். தந்தை பெரியார் அவர்களுடைய பகுத்தறிவுக் கொள்கை பற்றியும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா பற்றியும் தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி உரையாற்றினார்.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கழகத் தோழர்கள் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *