அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு மூன்று விழுக்காடு அகவிலைப்படி உயர்வு

viduthalai
1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

சென்னை, அக். 19- ஒன்றிய அரசு அறிவிப்பை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

நாட்டுக்கே வழிகாட்டும் வகையில், மக்கள் நலன் கருதி பல முன்னோடி நலத் திட்டங் களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இப்பணியில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலன் காக்கும் வகையில் பல் வேறு முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி சமீபத்தில் 53 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதை கனிவுடன் பரிசீலித்து, மாநில அரசு பணி யாளர்களுக்கும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனால், 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஜூலை 1 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள்.

இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரி யர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு சங்கங்கள் நன்றி

தங்கள் கோரிக்கையை ஏற்று அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள முதலமைச்சருக்கு பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *