பாலஸ்தீனத்தை விழுங்கும் இஸ்ரேல்

1 Min Read

இன்று இஸ்ரேல் நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கும் ஹஃபா-வில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கவர்மெண்ட் ஆப் பாலஸ்தீனம் – ஹஃபா மாகாணம் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த துறை முகம் இஸ்ரேலின் மய்யப் பகுதியில் உள்ளது.

ஈரான் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இஸ்ரேல் ராணுவத் தளங்களின் மீது பலஸ்டிக் என்னும் குறிபிட்ட இலக்கை மட்டுமே தாக்கும் ஏவுகணைகளை வீசியது.

அது பொதுமக்களுக்கும் குடி யிருப்பு பகுதிகளுக்கும் எந்த சேதத்தையும் விளைவிக்கவில்லை. ராணுவத் தளவாடம் மற்றும் விமானப் படை விமானங்களை மட்டுமே தாக்கி அழித்தது.

மீண்டும் ஈரான் இஸ்ரேலைத் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் இந்த ஹஃபா துறைமுகம் வழியாகத்தான் அருகில் உள்ள சைப்ரஸ் மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு குடும்பம் குடும்பமாக இடம் பெயர்கின்றனர். இந்த மின்விளக்குத் தூண் ஒன்றே போதும் பாலஸ்தீனத்தை இஸ்ரேலியர்கள் எந்த அளவிற்கு அபகரித்துள்ளார்கள் என்பதற்கு இன்றும் சான்றாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *