ஸநாதனப் பித்து முற்றிப் போச்சு! சாணியை சாப்பிடும் சங்கிகள்

viduthalai
2 Min Read

மனோஜ் மித்தல் என்பவர் தான் ஒரு பொது நல மருத்துவர் – அரியானாவைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு பசுமாட்டுச் சாணியை சாப்பிட்டுக்கொண்டே. இதை பெண்கள் குறிப்பாக கர்ப்பமாக உள்ள பெண்கள் சாப்பிட வேண்டும் – இதனால் சுகப் பிரசவம் ஆகும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் குழந்தை எந்த ஒரு நோயுமின்றி பிறக்கும் – அப்படி பிறக்கும் குழந்தைக்கு நோய் அண்டாது என்றும் கூறியிருந்தார்.

ஞாயிறு மலர்

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இது சரியா? உண்மைதானா? என்று ஆயூர் வேத அமைச்சரகத்திடமும், இந்திய மருத்துவக் கழகத்திடமும் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், அது நம்பிக்கை தொடர்பானது என்று கூறினார்களே தவிர இன்றுவரை யாருமே விளக்கம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் மேலைநாட்டில் இருந்து திரும்பியதாக கூறப்படும் பெண் ஒருவர் சட்டி நிறைய சாணத்தை நிரப்பி அதில் முகத்தை சில நிமிடம் அழுத்தி வைத்திருந்துவிட்டு பிறகு கூறுகிறார்.

“மேலைநாடுகளில் பெண்கள் முகத் தைப் பளபளப்பாக வைத்திருக்க மாட்டுச் சாணத்தில் செய்யப்பட்ட முகப் பூச்சுகளைப் பயன்படுத்துகிறார்கள். அதுவும் நமது ஊரில் இருந்து ஏற்று மதியாகும் நாட்டுப் பசுமாட்டுச் சாணத்தில் செய்தது.

ஆகவே, நான் நேரடியாகவே கோமாதாவின் சாணத்தை எனது முகத்திற்கு பயன்படுத்துகிறேன்” என்று சமூக வலைதள நேரலையில் முகத்தை சாணத்தில் அழுத்திக் காட்டினார்.

மாட்டுச் சாணம் ஒரு கழிவு மட்டுமே உடலில் தேவையில்லாத பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்ட சக்கை மற்றும் ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியங்கள், நாடாப் புழுக்களின் லார்வாக்கள் மற்றும் முட்டைகள் அதோடு கொக்கிப் புழு மற்றும் ஒட்டுண்ணி வகை முட்தோல் புழுக்கள் மற்றும் மாட்டின் கழிவு வெளியேறும் பகுதிகளில் மொய்க்கும் ஈக்களின் கழிவு அதன் முட்டை லார்வா போன்றவைகளும், இருப்பதாக “பயோ மெடிக்கல் செண்டர்் நேசனல் லைப்பிரரி ஆப் மெடிசன்” என்ற இதழில் 21.5.2021இல் வெளியிட்டுள்ளது.

கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் குறித்தும் மாட்டுத் தீவனத்தில் இருந்து எத்தனை சதவீதம் ஊட்டச்சத்துகளை மாட்டின் உள் உறுப்புகள் எடுத்துக்கொள்கின்றன என்பதைக் கண்டறியும் ஆய்விற்காக நடத்தப்பட்ட சோதனையில் இத்தனை நூண்ணுயிர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மாடுகள் மற்றும் இதர கால்நடைகளின் சாணம் குறித்து ஆய்வு நடத்தி அதில் உள்ள நுண்ணுயிர்கள் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளது.

மாட்டுக் கழிவில் உள்ள இந்த ஆபத்தை விளைவிக்கும் நுண்ணுயிர் களால் ஏற்படும் நோய்கள் தொழு நோய், என்புருக்கி, தோல் நோய், சிறுநீரக பாதிப்பு, கட்டிகள் மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் நீர் கோர்த்தல் போன்ற நோய்கள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மேலே குறிப்பிட்ட வகை நோய்கள் பெரும்பாலும் கால்நடை பராமரிப்பவர்களுக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *