தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் எண்ணிக்கை 2 ஆண்டுகளாக குறைந்து வருகிறது காவல்துறைத் தலைமை இயக்குநர் தகவல்

1 Min Read

அரசியல்

சென்னை, ஆக,1- தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என காவல்துறைத் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை அய்அய்டியில் ‘ஓட்டுநர் பயிற்சிக்கான திறன் மேம்பாடு மற்றும் தரநிலை, பாதுகாப்பான சாலைகளுக் கான பயணத்தில் மனிதனை வழி நடத்துதல்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (31.7.2023) நடைபெற்றது.

இதில், ஓட்டுநர்களின் அறிவு, திறன், நடைமுறையை சிறப்பாக மதிப்பிடுவதற்காக 3 கட்ட பயிற்சி செயல்முறையை சென்னை அய்அய்டியின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மய்யம் அறிமுகப் படுத்தியுள்ளது. இதன்மூலம் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள், பள்ளிகள், ஓட்டு நர்களுக்கு தேவையான பயிற்சியை அளிப்பதற்காக தணிக்கை, திறன் மேம் பாடு மற்றும் மதிப்பீட்டை வழங்க புதிய முறையை கொண்டுவரப்பட் டுள்ளது.

இந்த முயற்சி, ஓட்டுநர் பயிற்சி நிறு வனங்கள் மற்றும் பள்ளிகளிடையே ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை கொண்டு வருவதுடன் திறமையான பயிற்சியாளர்களுக்கும் பரந்த அளவி லான வேலைவாய்ப்புகளை உருவாக் கித்தரும். 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவல்துறைத் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பேசும்போது, “சாலை பாதுகாப்பு குறித்து நீண்டகாலமாக பேசி வருகிறோம்.

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டு களில் சாலை விபத்துகளின் எண் ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 11 சதவீதமாக இருந்த சாலை விபத்துகள், தற்போது 8 சதவீத மாக குறைந்துள்ளன. விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தால், அது நிறைய நன்மைகளுக்கு வழிவகுக்கிறது. உயிர் சேதங்கள் தடுக்கப்படுகின்றன” என் றார்.

சென்னை அய்அய்டி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, “வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் தானி யங்கி வாகனங்கள் வரத் தொடங்கி விட்டன.

இவற்றை அறிந்துகொள்ள கணிச மான காலம் எடுத்துக்கொள்ளப்படும். இடைப்பட்ட காலத்தில் மக்கள் எரி வாயு இயந்திர வாகனங்களில் இருந்து மின்சார வாகனத்துக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தானியங்கி வாகனங்கள் எப்போது வந்தாலும், இந்த புதிய முயற்சி பயன்படும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *