கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

18.10.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* ஈஷா மய்யத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை; பாலியல் தொல்லைகள், தவறான நடத்தை முறைகள் நடைபெறுவதாக ஈஷா பள்ளியின் மேனாள் ஆசிரியை பகிரங்க குற்றச்சாட்டு.
* உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி அடுத்த மாதம் ஓய்வு பெறுவதை அடுத்து, நீதிபதி சஞ்சய் கண்ணா பெயரை ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார் டி.ஒய். சந்திரசூட்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* வங்கதேசத்தில் இருந்து அசாமில் குடியேறியவர் களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை செல்லும்; பிரிவு 6ஏ-வை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த நிகழ்வில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. முதலமைச்சர் மீது எதிர்க்கட்சிகள் கண்டனம்.
* ஜம்மு காஷ்மீர் மாநிலத் தகுதியை மீண்டும் தர வேண்டும் என்ற மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
டைம்ஸ் ஆப் இந்தியா
* பாஜகவின் வாரிசு அரசியல்: அரியானாவில் மீண்டும் நயாப் சிங் சைனி முதலமைச்சராக பதவி ஏற்பு. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இரு பெண் அமைச்சர்களும் அரியானா மேனாள் முதலமைச்சர்கள் இரண்டு பேரின் பேத்திகள்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *