புதுடில்லி, அக்.18- மிகமுக்கியப் பிரமுகா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) கமாண்டோக்களை விடுவிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டு உள்ளது. அந்தப் பணியை மத்திய ரிசா்வ் காவல் படையினா் (சிஆா் பிஎஃப்) ஒருமாதத்துக்குள் முழுமையாக மேற்கொள்வாா்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமுள்ள 9 மிகமுக்கியப் பிரமுகா் களுக்கான பாதுகாப்பை என்எஸ்ஜி மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஒரு மாதத்தில் இப்பொறுப்பை சிஆா் பிஎஃப் ஏற்க இருக்கிறது. என்எஸ்ஜி என்பது பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட கமாண்டோ படையினா் ஆவா்.
நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியில் இருந்து சிஆா்பிஎஃப் படையினா் அண்மையில் விடுவிக்கப்பட்டனா். இவா்களைக் கொண்டு மிகமுக்கியப் பிர முகா்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தனிப் பிரிவு உருவாக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவரும், மேனாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி, ஒன்றிய அமைச்சா் சா்வானந்த சோனோவால், சத்தீஸ்கா் மேனாள் முதலமைச்சர் ரமண் சிங், காஷ்மீா் மேனாள் முதலமைச்சர்வா் குலாம் நபி ஆசாத், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, ஆந்திர முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு இப்போது என்எஸ்ஜி கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.