ஏலம் விடப்படும் கடவுள்! அமெரிக்காவில் ஏலம் விடப்பட உள்ள போக சக்தி அம்மன் சிலை

viduthalai
1 Min Read

கும்பகோணம், அக்.18 அமெரிக்காவில் ஏலம் விடப்படும் நிலையில் உள்ள போக சக்தி அம்மன் சிலையை மீட்க ஒன்றிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன் மாணிக்க வேல் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கோவில் தேவராயன பேட்டை யில் உள்ள சுகுந்த குந்த ளாம்பிகை அம்மன் உடனாய மச்ச புரீஸ்வரன் கோயிலுக்கு நேற்று (17.10.2024) வந்திருந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல், பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியது:
இந்தக் கோயிலின் போக சக்தி அம்மனின் பஞ்சலோக சிலை 1974-ஆம் ஆண்டு காணாமல்போனது. தற்போது அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் மேன்ஹாட்டனில் உள்ள ஏலக் கூடத்தில் உள்ள இந்த சிலையை ஏலம் விட முடிவு செய்துள்ளனர். இதை தடுத்து நிறுத்தி, சிலையை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமர், ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த சிலையை மீட்ட பின்னர், அதை சிலைகள் பாதுகாப்பு மய்யத்தில் வைக்காமல், கோயிலிலேயே வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஜூன் 14-ஆம் தேதி இந்த கோயிலின் தெற்கு மடவிளாகத்தில் பூமிக்கடியில் இருந்து கண்டெடுக் கப்பட்ட 13 சிலைகள்எங்கு உள் ளன என்பதை அதிகாரிகள் கூற மறுக் கிறார்கள். இந்த கோயிலில் 13 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் சுற்றுப் பகுதிகளிலும் இந்திய தொல்லியல் துறையினர் முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *