புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேற்கொண்டார்

Viduthalai
2 Min Read

அரசு

புதுக்கோட்டை,நவ.17-புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (15.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, மருத்துவத்துறையின் கட்டமைப்பு களை மேம்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள். அந்த வகை யில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களின் ஆணைக்கிணங்க, கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் செயல் பாடுகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கறம்பக்குடி அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்து 36 படுக்கைகள் கொண்ட தாலுகா மருத்துவமனையாக கடந்த 2015-ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் 3 மருத் துவர் பணியிடங்கள் ஒப்பளிப்பு செய் யப்பட்டு 3 மருத்துவர்கள் பணியில் உள்ள நிலையில் ஒரு மருத்துவர் கூடுத லாக மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 5 செவிலியர் பணியிடங்கள் உள்ள நிலையில் ஒரு தலைமை செவிலியர் பணியிடம் காலி யாக உள்ளது. நாள்தோறும் சராசரி யாக 450 புறநோயாளிகளும், 14 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனைக்கு பணி நிலையில் உள்ள மருத்துவர் களுடன் மற்ற மருத்துவமனைகளில் இருந்து மேலும் 02 மருத்துவர்கள் மாற்றுப் பணியில் பணியமர்த்தப்பட்டு 06 மருத்துவர்களுடன் 24 மணி நேர மும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இம்மருத்துவமனையில் படுக்கைவசதியுடன் கூடுதல் கட்டடம் வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில், சட்டமன்ற உறுப் பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயும், மாநிலங் களவை உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து 2 கோடி ரூபாயும் பெறப்பட்டு 50 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடப்பிரிவு ஏற்ப டுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

மேலும் மருத்துவர்கள், பணியாளர் களின் காலிபணியிடங்களை நிரப்புவ தற்கும், அவர்களுக்கான தங்குமிடம் கட்டுவதற்கும் நிதிநிலை அறிக்கையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். மேலும் பிணவறை கட்டுவதற் கான இடத்தினை தயார் செய்திட நட வடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. புதிய நுண்கதிர் கருவி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி, சிடி ஸ்கேன் கருவி tஸீனீsநீ மூலம் பெற்று வழங்கப்படும். மேலும் நிரந்தரப்பணியிடங்கள் 3 மாத காலத்திற்குள் தோற்று விக்கப்பட்டு அரசாணை வெளியிடப் படும். இதன்மூலம் இந்தப் பகுதி மக்க ளின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும். -இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாநிலங் களவை உறுப்பினர் எம்.எம்.அப் துல்லா, கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர் மரு.சண்முககனி, மேனாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லபாண்டியன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்) மரு.எஸ்.சிறீபிரியா தேன் மொழி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கறம்பக் குடி ஒன்றியக் குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை, கறம்பக்குடி பேரூ ராட்சித்தலைவர் முருகேசன், உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *