மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி!

1 Min Read

14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

சரன், அக்.17- மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச் சாராயம் குடித்த 6 பேர் பலியாகி விட்டனர்.

14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பீகாரில் மது விற்பனை மற்றும் நுகர்வுக்கு 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிதிஷ்குமார் அரசு தடை விதித்தது.

அதன்பின்னர் அங்கு கள்ளச் சாராய விற்பனை அதிகரித்து உள்ளது. இப்போது வரை அங்கு கள்ளச் சாராயம் குடித்ததால் 150க்கும் மேற்பட்டோர் இறந்த தாக சமீபத்தில் பீகார் அரசு ஒப்புக் கொண்டது.

இந்த நிலையில் நேற்று (16.10.2024) பீகாரின் சிவன் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ள மதுபானம் அருந்தியதால் குறைந்தது 6 பேர் பலியாகி விட்டனர்.

14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிவன் மாவட்டத்தில் 4 பேரும், சரனில் 2 பேரும் பலியாகி விட்டனர்.
இவர்கள் அனைவரும் 15.10.2024 அன்று இரவு கள்ளச் சாராயம் குடித்ததாகவும், அதன்பின் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானதா கவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாகர் மற்றும் அவுரியா பஞ்சாயத்துகளின் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *