ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

viduthalai
1 Min Read

குடிஅரசு நூற்றாண்டு விழா

ஈரோட்டில் 26.11.2024 செவ்வாய் அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – குடிஅரசு தொடங்கிய நூற்றாண்டு விழாக்களை முன்னிட்டு ஈரோட்டில் சிறப்பான முறையில் மாநாடு நடைபெற உள்ளது.

அந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள், கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்ய இருக்கிறார்கள்.
காலையில் கருத்தரங்கம், திராவிட இயக்கக் கண்காட்சி, மாலையில் பேரணி, கலை நிகழ்ச்சி இரவு திறந்த வெளி மாநாடு சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.

அனைவரும் மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். மாநாட்டை மிகச்சிறப்பாக வெற்றிகரமாக நடத்த தங்களுடைய பங்களிப்பை அன்பளிப்பை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

விழாக்குழு

ஈரோடு மாவட்ட திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *