ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

1 Min Read

குடிஅரசு நூற்றாண்டு விழா

ஈரோட்டில் 26.11.2024 செவ்வாய் அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – குடிஅரசு தொடங்கிய நூற்றாண்டு விழாக்களை முன்னிட்டு ஈரோட்டில் சிறப்பான முறையில் மாநாடு நடைபெற உள்ளது.

அந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள், கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்ய இருக்கிறார்கள்.
காலையில் கருத்தரங்கம், திராவிட இயக்கக் கண்காட்சி, மாலையில் பேரணி, கலை நிகழ்ச்சி இரவு திறந்த வெளி மாநாடு சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.

அனைவரும் மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். மாநாட்டை மிகச்சிறப்பாக வெற்றிகரமாக நடத்த தங்களுடைய பங்களிப்பை அன்பளிப்பை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

விழாக்குழு

ஈரோடு மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *