பட்டுக்கோட்டை, அக்.16- பட்டுக்கோட்டை ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் 14.10.2024 அன்று மதியம் 2:30 மணியளவில் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி மணிமண்டப வளாகத்தில் கழக பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்ல தம்பி தலைமையிலும் மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட துணைசெயலாளர் அ.காளிதாசன், ஒன்றிய கழக தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் இரெ.வீரமணி, நகர கழக தலைவர் பொறியாளர் சிற்பி வை.சேகர், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் வழக்குரைஞர் அ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையிலும் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கழக மாநில கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆகியோரின் செயல் ஊக்க உரையுடனும் நடைபெற்ற போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்
கடந்த 06.10.2024 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் தலைமையில் நடைபெற்ற கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது எனவும்,
2024 நவம்பர் 26 அன்று ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டில் பட்டுக்கோட்டை ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார்பில் தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது எனவும்,
பட்டுக்கோட்டை ஒன்றியத் தில் திராவிடர் கழகம், இளைஞர் அணி, மாணவர் கழக அமைப்பை வலுப்படுத்தும் வகையில் கழக அமைப்பு உள்ள கிராமங்களில் அமைப்பு கூட்டங்களை நடத்தி அமைப்புகளை புதுப்பித்து அறிவிப்பது கிராமங் களில் கிராமப் பிரச்சாரக் கூட்டங் களை நடத்துவது கழகக் கொடியேற்றுவது எனவும் முதற்கட்டமாக மாதம் ஒரு கிராமத்தில் கழகக் கொடியேற்றி திராவிடர் கழக பொதுக் கூட் டத்தை நடத்துவதெனவும்,
10 வயதில் மேடை ஏறி 91 வயதில் 81 ஆண்டு பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் உலகம் பெரியார் மயம் பெரியார் உலக மயம் என்ற முழக்கத்தை முன்வைத்து நாளும் உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை டிசம்பர் முதல் வாரத்தில் பட்டுக் கோட்டை நகரில் தோழமை இயக்க பொறுப்பாளர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடத்துவதெனவும் முடிவு செய்யப்படுகிறது.
கூட்டத்தில் பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆ.இரத்தின சபாபதி திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் ஏனாதி சி.ரெங்கசாமி நகர திராவிடர் கழக செயலாளர் கா.தென்னவன் சேது பாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சி.ஜெகநாதன் பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் கனக. ராமச் சந்திரன் ஏனாதி ஆசை பாண்டி பட்டுக்கோட்டை ராஜா உள்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு இயக்க செயல்படுகளை அதிகபடுத்திட ஆலோசனை வழங்கினர்.